லலித், அனுஷவிற்கு நீதிமன்றம் அழைப்பாணை!!
Read Time:1 Minute, 25 Second
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பணிப்பாளர் நாயகம் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
600 மில்லியன் ரூபா முறைகேடு தொடர்பில் இருவருக்கு நீதிமன்றம் அழைப்பானை விடுத்துள்ளது.
தேரர்களுக்கான காவியுடைக்குரிய துணிகளை பகிர்ந்தளிக்கும் வைபவத்துக்கு இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் நிதியிலிருந்து 600 மில்லியன் ரூபாவை முறைகேடான முறையில் பயன்படுத்தியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
விசாரணைகள் முடிந்துள்ள நிலையில் இவ்விருவருக்கு எதிராகவும் சட்டமா அதிபர் குற்றப் பத்திரங்களை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating