70,000 போதைமருந்து வில்லைகளுடன் இருவர் கைது!!
Read Time:1 Minute, 3 Second
சட்டவிரோதமான முறையில் போதை மருந்துகளை கொண்டு சென்ற இருவரை வாழைத்தோட்டம், புதுக்கடை பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸ் விசேட படைப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் முச்சக்கர வண்டி ஒன்றை நிறுத்தி சோதனை செய்ததில் இந்த போதை மருந்துகள் கண்டெடுக்கப்ட்டுள்ளன.
இதன்போது 07 பெட்டிகளுக்குள் அடைக்கப்பட்ட 70,000 போதை மருந்து வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட போதை மருந்துகளின் பெறுமதி 45 இலட்சம் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொழும்பு 12ஐ சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating