போலி நாணயத் தாளுடன் ஒருவர் கைது!!
Read Time:54 Second
5000 ரூபா போலி நாணயத் தாள்களை தன்னகத்தே வைத்திருந்த ஒருவர் மாவனெல்லை – கனேதென்ன பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே இவர் கைதாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
சந்தேகநபர் கினிகத்தேன பகுதியைச் சேர்ந்த 27 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.
இவரை இன்று மாவனெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மாவனெல்லை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating