ஜனாதிபதி நாளை மறுநாள் அமெரிக்கா செல்கிறார்!!
Read Time:55 Second
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 23ம் திகதி அமெரிக்காவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.
அத்துடன், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவையும் சந்தித்து முக்கிய கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை மாநாட்டின் 70வது அமர்வு இந்த மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating