நீதிமன்றங்களில் புலனாய்வு அதிகாரிகள்!!
Read Time:1 Minute, 0 Second
கொழும்பில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கு புலனாய்வு அதிகாரிகளை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றில் நடைபெறும் சட்டவிரோத செயல்களை தடுக்கவென இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.
இன்று புதுக்கடை நீதிமன்றுக்கு நான்கு புலனாய்வு அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் புஸ்பகுமார தெரிவித்தார்.
நாளை தொடக்கம் கோட்டை, மரியகந்த, நுகேகொட மற்றும் கல்கிஸ்ஸ நீதிமன்றங்களுக்கு புலனாய்வு அதிகாரிகள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
Average Rating