ஆந்திராவில் ஆஸ்பத்திரிகளில் எலி, பாம்புகள் நடமாட்டத்தை கண்காணிக்க கேமிரா!!
ஆந்திர மாநிலம் குண்டூர் அரசு மருத்துவமனையில் எலி கடித்து குழந்தை இறந்த சம்பவம், அதன் பின் வார்டுகளில் பாம்பு புகுந்தது. பெண் நோயாளியை பெருச்சாளி கடித்தது போன்ற சம்பவங்களால் மாநில சுகாதாரதுறை கதிகலங்கி போய் உள்ளது.
ஆஸ்பத்திரியில் எலியை பிடித்து அழிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு எலியை பிடித்தால் 10 ரூபாய் என கூலி வழங்கப்பட்டது.
இதுவரை 400–க்கும் மேற்பட்ட எலிகள் பிடித்து அழித்த போதிலும் அதன் அட்டகாசம் ஓயவில்லை. எங்கிருந்து எலி வருகிறது என்று தெரியாமல் குழப்பம் அடைந்து உள்ளனர்.
இதனால் அரசு ஆஸ்பத்திரியில் எலி மற்றும் பாம்பு நடமாட்டத்தை கண்காணிக்க கேமிரா பொறுத்த சுகாதாரதுறை நடவடிக்கை எடுத்து உள்ளது.
முதல்கட்டமாக மருத்துவ கல்லூரியுடன் கூடிய ‘‘அரசு மருத்துவமனைகளில் 60 கேமிரா பொறுத்த திட்டமிட்டு உள்ளனர்.
திருடர்களை கண்காணிக்கத்தான் கேமிரா வைப்பார்கள். ஆனால் எலி நடமாட்டத்தை கண்காணிக்க கேமிரா வைப்பது புதுமையாக உள்ளதாக மருத்துவமனை நோயாளிகள் கூறினர்.
Average Rating