நகல்ஸ் மலைத்தொடருக்கு சுற்றுலா சென்ற நால்வரை காணவில்லை!!
Read Time:1 Minute, 16 Second
நகல்ஸ் மலைத்தொடருக்கு சுற்றுலா சென்ற நான்கு பேர் காணாமல் போயுள்ளதாக ரங்கல பொலிஸில் முறைப்பாடு பதிவாகியுள்ளது.
கடந்த 20ம் திகதி இந்த நால்வரும் நகல்ஸ் மலைத்தொடருக்கு சுற்றுலா சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நேற்று இரவு வரை சுற்றுலா சென்ற நால்வரும் திரும்பி வராத நிலையில் அந்த நால்வரில் ஒருவருடைய மனைவி ரங்கல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அவர்கள் பயணம் செய்த முச்சக்கர வண்டி நகல்ஸ் மலைத் தொடருக்கு பள்ளத்தில் உள்ள வீடொன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸர் தெரிவிக்கின்றனர்.
ரங்கல பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
Average Rating