குடியாத்தம் அருகே இளம்பெண்ணை கற்பழித்து படம் எடுத்து மிரட்டிய வாலிபர்கள்!!
குடியாத்தம் அடுத்த மேல்பட்டியை சேர்ந்தவர் சர்மிளா (வயது 22). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பட்டபடிப்பு முடித்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செல்வம் மகன் மகேஷ் (29) என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் தனது நண்பர் வினோத்குமார் என்பவரின் வீட்டுக்கு சர்மிளாவை மகேஷ் அழைத்து சென்றார். அங்கு திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சர்மிளாவை மகேஷ் கற்பழித்தார். இதனை அவரது நண்பர் வினோத்குமார் செல்போனில் படம் பிடித்ததாக தெரிகிறது.
மகேஷ் கற்பழித்ததால் சர்மிளா கர்ப்பம் ஆனார். இதுபற்றி மகேசிடம் கூறி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார்.
திருமணத்துக்கு மறுத்த மகேஷ் தன்னுடன் நெருக்கமாக இருந்ததை செல்போனில் படம் எடுத்து வைத்துள்ளேன். என்னை வற்புறுத்தினால் அந்த படங்களை வெளியிடுவேன் எனக் கூறி மிரட்டினார். மேலும் அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இதற்கிடையே சர்மிளா 5 மாத கர்ப்பிணியானார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வினோத்குமார் சர்மிளாவை சந்தித்தார். மகேசுடன் நெருக்கமாக இருந்த படங்கள் தன்னிடம் உள்ளது. எனது ஆசைக்கு இணங்காவிட்டால் அந்த படங்களை வெளியிடுவேன் என மிரட்டினார். இதனால் திடுக்கிட்ட சர்மிளா இதுகுறித்து குடியாத்தம் டி.எஸ்.பி. சங்கரனிடம் புகார் கொடுத்தார்.
அவரது உத்தரவின் பேரில் குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து மகேஷ், வினோத்குமார் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating