கைதான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தொடர்ந்தும் விளக்கமறியலில்!!
Read Time:1 Minute, 11 Second
வவுனியாவின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் யூ.கே.திஸாநாயக்கவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
புதையல் தேடிய சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட திஸாநாயக்க கடந்த 19ம் திகதி இரவு சட்டத்தரணி ஊடாக பொலிஸில் சரணடைந்தார்.
பின்னர் அவரை கோட்டை மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது 23ம் திகதி (இன்று) வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
மேலும் குறித்த தினத்தில் அவரை மீண்டும் வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் இதன்போது நீதவான் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு தெரிவித்தார்.
இதன்படி இன்று சந்தேகநபரை வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் 30ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Average Rating