சேலத்தில் மர்ம காச்சலுக்கு சிறுவன் பலி

Read Time:1 Minute, 39 Second

சேலம் அருகே மர்ம காய்ச்சலால் சிறுவன் இறந்தான். சேலம் மாவட்டம், அரியாகவுண்டன் பட்டி, எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் வசந்தா. இவருக்கு கவுசல்யா, லட்சுமி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். ராமன் என்ற ஐந்து வயது மகனும் இருந்தான். சில தினங்களுக்கு முன் ராமனுக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் ராமனை சிகிச்சைக்காக அங்குள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். இந்நிலையில், சிகிச்சை பலன் இன்றி சிறுவன் ராமன் பரிதாபமாக இறந்தான். இந்த தகவல் காட்டு தீ போல் பரவியதால் மக்களிடம் அச்சம் ஏற்பட்டது. இந்நிலையில் வசந்தாவின் மகள்களான கவுசல்யா, லட்சுமி ஆகிய இருவருக்கும் மர்ம காய்ச்சல் வந்தது. இதனால் அவர்களையும் சிகிச்சைக்காக அங்குள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். தகவல் அறிந்த அதிகாரிகள் மருத்துவ குழுவினருடன் அந்த ஊருக்கு வந்து மருத்துவ பரிசோதனை செய்தனர். மேலும் பல இடங்களில் கொசு மருந்து அடிக்கப்பட்டது. இது குறித்து மாநகராட்சி நகர் நல அலுவலர் ஜெமினி கூறும் போது இது சளியால் ஏற்படும் சாதாரண காய்ச்சல் தான், டெங்கு காய்ச்சல் அல்ல என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post துபாயில் இறந்த தமிழர் – சோகத்தில் மனைவி
Next post ஏரல் அருகே பட்டதாரி பெண் குத்தி கொலை