இந்தோனேஷியாவில் பறவைக்காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலி

Read Time:1 Minute, 0 Second

இந்தோனேஷிய நாட்டில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு இன்னும் ஓய்ந்தபாடில்லை. இந்நோய்க்கு இதுவரை 90 பேர் உயிரிழந்து இருந்தனர். இந்நிலையில் சுமத்ரா தீவில் உள்ள பேகான்பாரு என்ற இடத்தில் வசித்து வந்த 31 வயது வாலிபர் ஒருவர் பறவைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அவர் உடனடியாக உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் பறவைக்காய்ச்சலுக்கான சிறப்பு பொது ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். எனினும் அந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து இந்தோனேஷியாவில் பறவைக்காய்ச்சலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்து உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post உலக நாடுகளின் நெருக்கடி எதிரொலி ஒரு மாதத்துக்குள் நெருக்கடி நிலையை வாபஸ் பெறுவோம் பாகிஸ்தான் அரசு அறிவிப்பு
Next post ஏட்டைக் கடித்துக் குதறிய மன நலம் பாதித்த பெண்