சிறுமி கொலையுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கைது!!
Read Time:1 Minute, 7 Second
கொடதெனியாவில் 5 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கம்பஹா – படுவத்துகொட வனப் பகுதியில் இருந்தே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் உயரதிகாரி ஒருவர் அத தெரணவிடம் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர் குறித்த சிறுமி வசித்த வீட்டுக்கு அருகாமையில் வசித்த ஒருவர் என தெரியவந்துள்ளது.
அத்துடன் சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த இவரை, பிரதேச மக்களின் உதவியுடன் இன்று கைது செய்துள்ளனர்.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் கைதான மேலும் இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating