சுயாதீன ஆணைக்குழு குறித்து கலந்துரையாடல்!!
Read Time:1 Minute, 21 Second
சுயாதீன ஆணைக்குழுவுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிப்பதில் முறையான பொறிமுறையை பின்பற்ற அரசியலமைப்புச் சபை தீர்மானித்துள்ளது.
சிவில் சமூக உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக அரசியலமைப்புச் சபை நேற்று மாலை சபாநாயகர் தலைமையில் கூடியது.
19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள சுயாதீன ஆணைக்குழுவை விரைவில் நியமிக்கவும் அந்த நடவடிக்கைகளில் சிவில் சமூக உறுப்பினர்கள் மூவருக்கும் அதிக பொறுப்புகளை வழங்கவும் இதன்போது இணக்கம் காணப்பட்டுள்ளது.
அத்துடன் சுயாதீன ஆணைக்குழுவுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் அரசியலமைப்புச் சபையை மீண்டும் ஒக்டோபர் 9ம் திகதி கூட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Average Rating