தங்கம் கடத்த முற்பட்ட இருவர் கைது!!
Read Time:1 Minute, 4 Second
சட்டவிரோதமாக ஒரு தொகை தங்கத்தை கடத்த முற்பட்ட இந்தியப் பிரஜை உள்ளிட்ட இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் இருந்து நாட்டுக்கு வருகை தந்த சந்தேகநபர்கள் பயணப் பையில் இருந்து குறித்த தங்கம் மீட்கப்பட்டுள்ளதாக, சுங்க ஊடகப் பேச்சாளர் லேஸ்லி காமினி குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி 900 கிராம் நிறையுடைய 9 தங்கக் கட்டிகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இவற்றின் பெறுமதி 45 இலட்சம் ரூபாவுக்கு அதிகம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சந்தேகநபர்கள் தொடர்பில் விமான நிலைய சுங்கப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating