மின்னல் தாக்கியதில் மூவர் உயிரிழப்பு!!
Read Time:46 Second
கொகரெல்ல, ஹதவல்பொல பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்கு மின்னல் தாக்கியதில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
55 வயது மற்றும் 36 வயதுடைய மாமி மற்றும் மருமகள் ஆகியோரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதுதவிர பகமுன, பம்புரவெல பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் 54 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபரின் மனைவிக்கும் மின்னல் தாக்கியுள்ள நிலையில் மனைவி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
Average Rating