கொத்மலையில் மண்சரிவு – மூவர் உயிரிழப்பு; மூவரைக் காணவில்லை!!
Read Time:47 Second
கொத்மலை வெதமுல்லை பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவினால் தோட்டமொன்றில் இருந்த லயன் வீடுகள் சில இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் மேலும் மூவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மண்சரிவினால் உயிரிழந்த மூவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
இன்று பகல் முதல் பெய்துவரும் கடும் மழை காரணமாக இந்த மண்சரிவு இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.
Average Rating