இலங்கையின் முடிவுக்கு பிரித்தானியா வரவேற்பு!!
Read Time:1 Minute, 0 Second
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் எடுக்கப்பட்ட யோசனைக்கு இலங்கை இணக்கம் வெளியிட்டமை குறித்து பிரித்தானியா தமது வரவேற்பை வெளியிட்டுள்ளது.
இது இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட முக்கிய நடவடிக்கை என, பிரித்தானியாவின் பிரதி வெளியுறவு மற்றும் பொதுநலவாயத்துறை அமைச்சர் ஹூகோ ஸ்வைரி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தொடர்பில் அமெரிக்கா முன்வைத்துள்ள பிரேரணைக்கு தமது இணக்கத்தை வௌியிடுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இதனை அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன்கெரி நேற்று வரவேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Average Rating