மாட்டு வண்டி மோதி வாலிபர் பலி
Read Time:1 Minute, 1 Second
மாட்டு வண்டி மோதி வாலிபர் பலினானார். திண்டிவனம் காவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் நாராயணன் (வயது 27). இவர் திண்டிவனம் நகர்மன்ற கவுன்சிலர் ஜெயராஜின் தம்பி ஆவார். இவர் வெள்ளிமேடு பேட்டை பகுதியில் இருந்து திண்டிவனம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். திண்டிவனம் சந்தைமேடு பகுதியில் வந்தபோது எதிர்பாராதவிதமாக மாட்டுவண்டி மீது இவரது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த நாராயணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திண்டிவனம் ரோஷனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.