பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை மறக்க முடியவில்லை
பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை தன்னால் மறக்க முடியவில்லை என்று அவருடைய மாஜி மனைவி பத்மா லட்சுமி கூறியிருக்கிறார். புக்கர் பரிசு உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ள பிரபல நாவலாசிரியர் சல்மான் ருஷ்டியை இந்திய வம்சாவளியை சேர்ந்த மாடல் அழகி பத்மா லட்சுமி காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த ஓராண்டுக்கு முன் இவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இந்நிலையில் பத்மா லட்சுமி தன்னால் ருஷ்டியை மறக்க முடியவில்லை என்று கூறியுள்ளார். அவருடைய குரலை கேட்க முடியாமல் தவிப்பதாகவும், அவருடைய ஆலோசனைகளை பெற முடியாமல் வருந்துவதாகவும் பத்திரிகை பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார். பத்மா லட்சுமி விவாகரத்து கோரியவுடன் சல்மான் ருஷ்டி அவரை தனது வீட்டிலிருந்து வெளியேறுமாறு கூறி விட்டார். அதன் பிறகு அவர் ஓட்டலில் வசித்து வருகிறார். கோடீஸ்வரர் ஒருவரோடு பத்மா லட்சுமிக்கு ஏற்பட்ட காதலே இந்த பிரிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால் பத்மா லட்சுமி இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
மேலும் ருஷ்டியின் முதல் மனைவி குழந்தைகளை தான் பாசத்தோடு பார்த்துக் கொள்ளவில்லை என்று கூறப்படுவதையும் இவர் மறுத்துள்ளார்.
விவாகரத்து தொடர்பாக சல்மான் ருஷ்டி விரிவான அறிக்கை வெளியிட்டது தனக்கு வருத்தமளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
நட்போடு பிரிந்ததால் எங்கிருந்தாலும் வாழ்க என்று மட்டும் சொல்லியிருந்தால் போதும் என்று நினைத்ததாக அவர் கூறியுள்ளார்.