ஹெரோயினுடன் பெண் உள்ளிட்ட ஏழ்வர் கைது!!
Read Time:1 Minute, 17 Second
ஹெரோயின் வைத்திருந்த பெண்ணொருவர் உள்ளிட்ட ஏழ்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கல்கிசையில் நான்கு கிராம் 320 மில்லிகிராம் ஹெரோயினுடன் 42 வயதான ஒருவர் கைதானார்.
இவர் கல்கிசை – படோவிட பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
இதேவேளை தெல்கத பகுதியில் 3 கிராம் 640 மில்லிகிராம் ஹெரோயினுடன் 50 வயதான ஒருவர் கைதானார்.
அத்துடன் வத்தளை பகுதியில் 2 கிராம் 582 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் பெருந்தொகை பணத்துடன் முச்சக்கர வண்டியொன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
இதில் 26 வயதான பெண் உள்ளிட்ட ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மாதம்பிடிய பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
மேலும் கைதானவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Average Rating