இளம்பெண் மயக்கம்

Read Time:2 Minute, 54 Second

anisexdance.gifவிழுப்புரம் அருகே மூங்கில்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆதி திராவிட பெண் ஒருவர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக மனு கொடுக்கச் சென்ற போது மயங்கி விழுந்தார். அவரை போலீசார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். விழுப்புரம் தாலுகா விக்கிரவாண்டி அருகே உள்ள மூக்கில்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் பாஸ்கர் (வயது 30). இவர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஆதி திராவிடர் இனத்தைச் சேர்ந்த ஜெய பிரியா (வயது 27) என்ற பெண்ணை கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஜெய பிரியா கர்ப்பம டைந்தார். இதன் பின்னர் 25.6.2007 அன்று இருவருக்கும் திருமணம் நடந்தது. இருப்பினும், பாஸ்கரன், ஜெயபிரியாவை கர்ப்பத்தை கலைக்கு மாறு வற்புறுத் தியுள்ளார். ஆனால், ஜெய பிரியா அதற்கு மறுத்து விட்டார். இந்நிலையில், 13.9.2007 அன்று புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவ மனையில் ஜெய பிரியாவுக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. தற்போது அந்த பெண் குழந்தை யை கொலை செய்து விடுவதாக பாஸ் கரன் குடும்பத்தினர் ஜெய பிரியாவை மிரட்டி வருவதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து பாஸ்கர் அந்த குழந்தையை எடுத்துக் கொண்டு ஓடி விட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜெய பிரியா, மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் கொடுக்கச் சென்றார். ஆனால், எஸ்.பி. அலுவலகம் அருகே சென்றபோது ஜெய பிரியா மயக்கமடைந்து கீழே விழுந்தார்.

உடனடியாக போலீசார் ஜெய பிரியாவை விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவரிடம் இருந்து கைப்பற்ற பட்ட புகார் மனுவில் தனது குழந்தையை மீட்டுத் தரக்கோரியும், தன்னை துன்புறுத்திய கணவர் வீட்டார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் குறிப்பிடப்பட்ட தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
Next post சேலையில் தீ: பெண் சாவு