இன்று கனமழை பெய்ய வாய்ப்பு!!
Read Time:1 Minute, 14 Second
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழையுடன் கூடிய காலநிலையை எதிர்பார்க்க முடியும் என வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் சில பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியும் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
மேல், தெற்கு, சப்ரகமுவ மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும், மாலை 02.00 மணிக்குப் பின் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் மின்னல் தாக்கங்கள் ஏற்படக் கூடும் என்பதால் மக்கள் அனைவரையும் மிகவும் அவதானத்துடன் இருக்கும் படியும் வானிலை அவதான நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.
Average Rating