சேலையில் தீ: பெண் சாவு
நீலாங்கரையில் சேலையில் தீப்பிடித்து இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது காதல் கணவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னையை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை உள்ளது. இந்நிலையில் கந்தசாமி பனையூர் பகுதியைச் சேர்ந்த அபிமா (வயது 18) என்ற இளம் பெண்ணை காதலித்தாராம். கடந்த சில மாதங்களுக்கு முன் கந்தசாமி, அபிமாவை பனையூரி லிருந்து அழைத்து வந்து நீலாங்கரை முத்துமாரியம்மன் கோயில் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தாராம். அபிமா, சேலையில் தீப்பிடித்த நிலையில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடியதாக கூறப் படுகிறது. அவரை அருகில் உள்ளவர்கள் கீழ்ப்பாக்கம் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்றிரவு அபிமா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சமையல் செய்யும் போது சேலைøயில் தீப்பிடித்து அபிமா இறந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.