3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

Read Time:1 Minute, 12 Second

4959291.gifஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற இருவேறு மோதல்களில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாரமுல்லா மாவட்டம் சோபோரே பகுதியில் இரண்டு தீவிரவாதிகளும், புல்வாமா மாவட்டத்தில் ஒரு தீவிரவாதியும் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே ஜம்முவில் லஷ்கர்இதொய்பா தீவிரவாத இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ரியாசி மாவட்டம் அங்ராலா பகுதியை சேர்ந்த அவரை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து கைது செய்ததாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்தன. கைது செய்யப்பட்ட குஷி முகமது என்ற அந்த நபர் லஷ்கர்இதொய்பா கமாண்டர் மன்சூர் அகமதுக்கு ஆயுதங்களை கடத்த உதவியதாக கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post நாயை மணந்த வாலிபர்
Next post இளம்பெண் மயக்கம்