கடைக்கு வந்த சிறுவன் துஷ்பிரயோகம் – வர்த்தகருக்கு பிணை!!
Read Time:57 Second
சிறுவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ரம்புக்கன பகுதியைச் சேர்ந்த 54 வயதான வர்த்தகர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வீட்டுக்குத் தேவையான பொருட்கள் சிலவற்றை வாங்குவதற்காக கடைக்கு வந்திருந்த 8 வயது சிறுவன் ஒருவனையே இவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபரை இன்று (28) கோகலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளை, ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு மீண்டும் டிசம்பர் 10ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
Average Rating