துப்பாக்கி, ரவைகளுடன் இருவர் கைது!!
Read Time:58 Second
பயாகல – பழைய மேம்பாலம் பகுதியில் துப்பாக்கிகளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
களுத்துறை குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது சந்தேகநபர்கள் வசமிருந்து இரண்டு துப்பாக்கிகள் மற்றும் 11 ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவர்கள் அளுத்கம – பயாகல பகுதியைச் சேர்ந்த 38 மற்றும் 27 வயதான இருவர் எனத் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை களுத்துறை குற்றத் விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating