4 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த ஆசிரியர் விளக்கமறியலில்!!

Read Time:2 Minute, 7 Second

255940387Untitled-1மஸ்கெலிய பிரதேச பாடசாலை ஒன்றில் மாணவிகள் நால்வரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் அந்த பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

நோர்வூட் பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று செவ்வாய்க்கிழமை அவரை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் மஸ்கெலியா பொலிஸார் ஆஜர்படுத்தினர்.

இதனையடுத்து சந்தேகநபரை எதிர்வரும் 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

10ம் தரத்தில் கல்வி பயிலும் நான்கு மாணவிகளை குறித்த ஆசிரியர் தனியார் வகுப்பு என்ற போர்வையில் பலமுறை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் குறித்த 4 மாணவிகளையும் பரிசோதனைக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்து பின்னர் மேலதிக பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றியுள்ளனர்.

இதேவேளை, மாணவிகளின் பாதுகாப்பு தொடர்பில் கவனமற்றிருந்த பாடசாலை அதிபர், உப அதிபர் மற்றும் ஆசிரியர் குழாம் இதற்கு பொறுப்பு கூற வேண்டும் என்றும், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஆசிரியரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் பெற்றோரும், பிரதேச மக்களும் இன்று ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காலி, மாத்தறை மக்களே அவதானம்!!
Next post இலங்கை விவகாரம் – சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு போராட்டம்!!