ஹெரோயின் வைத்திருந்த தம்பதிக்கு மரண தண்டனை!!
Read Time:57 Second
ஹெரோயின் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை போன்றவற்றுடன் தொடர்புடைய தம்பதிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
2010ம் ஆண்டு மாலபே – தலாஹேன பிரதேசத்தில் 22 கிராம் ஹெரோயினை தன்னகத்தே வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை தொடர்பில் இவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இவர்களுக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் மரண தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Average Rating