இலங்கை விவகாரம் – சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு போராட்டம்!!
Read Time:57 Second
தமிழர்களே, இந்திய அரசு தன் கள்ள மௌனத்தைக் கலைக்க வேண்டும், தமிழர்களின் உணர்வுகளை மதித்து நம் நீதிக் கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என்ற செய்தியை டெல்லியின் செவிகளில் ஒலிக்கச் செய்திட இன்று (29) தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர் என, இந்திய ஊடகமான நக்கீரன் செய்தி வௌியிட்டுள்ளது.
இதன்போது, இந்திய அரசின் சென்னைப் பணிமனைகள் இயங்கும் சாஸ்திரி பவனத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் தலைமயில் அறப்போர் முறையில் முற்றுகையிட்டனர்.
இதில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Average Rating