8 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த இருவர் – ஒருவர் கைது!!

Read Time:1 Minute, 39 Second

155358891Untitled-1எட்டு வயதான பாடசாலை மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஒருவரை சிலாபம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சந்தேகநபர் ஆராச்சிக்கட்டு – அடிப்பல பகுதியைச் சேர்ந்த 23 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு அவர் இன்னும் கைதுசெய்யப்படவில்லை.

சிலாபம் – அடிப்பல பகுதியைச் சேர்ந்த தரம் மூன்றில் கல்வி கற்கும் மாணவனே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்களால் இருமுறை சிறுவன் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தமது பிள்ளைக்கு நேர்ந்த அநீதியை அறிந்த பெற்றோர் சிலாபம் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். பின்னர் சிறுவன் வைத்தியப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட போது, அவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமை உறுதி செய்யப்பட்டது.

மேலும் கைதான சந்தேகநபரை சிலாபம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அடர்ந்த காட்டிலுள்ள குகையில் இருந்து சிறுமி மீட்பு! நடந்தது என்ன?
Next post யூ.கே.திஸாநாயக தொடர்ந்தும் விளக்கமறியலில்!!