மின்தடை குறித்த ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கை பட்டகொடவிடம்!!

Read Time:1 Minute, 27 Second

34990-003நாடு முழுவதும் மின்தடை ஏற்பட்டமை குறித்த ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை, மின்சக்தி அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் குறித்த அறிக்கை அமைச்சின் செயலாளர் பீ.எம்.எஸ்.பட்டகொடவிடம் கையளிக்கப்பட்டதாக மின்சார சபையின் பொதுமுகாமையாளர் எம்.சீ.விக்ரமசேகர தெரிவித்துள்ளார்.

மின்சாரம் தடைப்பட்டது முதல் அது வழமைக்கு கொண்டுவரப்பட்ட நேரம் வரை அனைத்து தகவல்களும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை மின்தடை தொடர்பான தொழிநுட்ப அறிக்கையே இவ்வாறு தயாரிக்கப்பட்டுள்ளதாக விக்ரமசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

மின்தடைக்கான காரணம் மற்றும் அது மீண்டும் ஏற்படாமல் தவிர்ப்பது தொடர்பில் அந்த அறிக்கையில் ஆராயப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் நாடு முழுவது சில மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்பட்டது, என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யூ.கே.திஸாநாயக தொடர்ந்தும் விளக்கமறியலில்!!
Next post ஈழ தமிழர் பிரச்சினை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இளைஞர்களை திரட்டுவேன்!!