7 விடுதலைப்புலிகள் பலி

Read Time:1 Minute, 14 Second

aniltte.gifஇலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் ராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலில் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. வவுனியா மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் மீது விடுதலைப்புலிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதாக ராணுவ உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராணுவத்தினர் திருப்பி சுட்டதில் 4 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாக அவர் கூறியுள்ளார். இதேபோல் திரிகோணமலை மாவட்டத்தில் ராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலில் 3 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விடுதலைப்புலிகள் தரப்பில் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post முஷாரப்புக்கு பிரவுன் கோரிக்கை
Next post 20 ஆயிரம் வக்கீல்கள் கைது