போலீசாரின் வாக்கி டாக்கியை திருடிய 2 பேர் சிக்கினர்…!!
Read Time:1 Minute, 16 Second
தேனாம்பேட்டை போலீஸ் நிலையம் முன்பு நின்று கொண்டு இருந்த ரோந்து வாகனத்தில் சப்–இன்ஸ் பெக்டர் ஒருவரின் வாக்கி டாக்கி நேற்று முன்தினம் இரவு மாயமானது. அதனை யாரோ திருடிச் சென்றது தெரிய வந்தது.
போலீசார் விசாரணையில் ‘‘வாக்கி டாக்கியை திருடியதாக தியாகராயநகர் தெற்கு போக் சாலையை சேர்ந்த முரளி, தாம்பரத்தை சேர்ந்த அவரது நண்பர் ஆகியோர் பிடிபட்டனர். குடிபோதையில் வாக்கி டாக்கியை எடுத்து குப்பை தொட்டியில் வீசியதாக அவர்கள் தெரிவித்தனர். பிடிபட்ட 2 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள்.
தேனாம்பேட்டையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் நிலையத்தில் புகுந்த ஒரு கும்பல் அங்கிருந்த வாக்கி டாக்கியை திருடிச் சென்றது குறிப்பிடத்தக்கது.
Average Rating