பஸ்ஸுக்காக காத்திருந்த பெண் வேன் மோதியதில் உயிரிழந்தார்..!!
Read Time:1 Minute, 24 Second
பண்டாரகம வேவிட்ட யடியன பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் 35 வயதுடைய இரு பிள்ளைகளின் தாய் ஒருவர் மரணமானார்.
களுத்துறை வஸ்கடுவை ஆரம்ப பாடசாலையில் அலுவலக உதவியாளராக கடமைபுரியும் இவர் கடமைக்குச் செல்வதற்காக பஸ்தரிப்பிடத்தில் பஸ்ஸுக்காக காத்து நின்ற போது வான் ஒன்று இவர் மீது மோதியுள்ளது.
இவர் பாணந்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் மரணமாகியுள்ளார்.
பண்டாரகமையிலிருந்து களுத்துறை பக்கமாகச் சென்றுள்ள வேன் இவரை மோதி விட்டு வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றில் மோதிய பின் நிறுத்தப்பட்டுள்ளது.
வேனுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன் அதில் பயணம் செய்த இருவர் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
பண்டாரகம பொலிஸார் விசாரணை களை மேற்கொண்டுள்ளனர்.
Average Rating