கண்டி நகரில் தீ – இரண்டு கார்கள் எரிந்து நாசம்..!!
கண்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டி ஸ்ரீ விக்ரமராஜசிங்க வீதியில் அமைந்துள்ள வாகன திருத்தப்பணிகள் செய்யும் கடையில் 01.10.2015 அன்று பிற்பகல் 1 மணியளவில் தீடிரென ஏற்பட்ட தீ விபத்தில் திருத்தப்பணிகளுக்காக கொண்டு வந்த இரண்டு கார்கள் முற்றாக எரிந்து சாம்பலாகியதோடு ஒருவர் படுங்காயமடைந்து கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த கார் ஒன்றை திருத்தப்பணிகள் மேற்கொள்ளும் போது காரில் இரும்பு ஒட்டும் வேலை (வேல்டீங்) செய்யும் போது அதிலிருந்து பரவிய தீ கிழே பரவி இருந்த பெற்றோலில் பரவி இந்த தீ ஏற்பட்டுள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த தீ விபத்து காரணமாக குறித்த கடைக்கு அண்மித்த பகுதியிலிருந்த கெப்பட்டிபொல சிங்கள மகா வித்தியாலய மாணவர்களுக்கு பாடசாலை அதிபர் விடுமுறை வழங்கியுள்ளார்.
கண்டி மாநகர சபை தீயணைப்பு பிரிவினரினால் இந்த தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating