13 வயது சிறுமியின் கையைப் பிடித்து இழுத்த 74 வயதான நபருக்கு விளக்கமறியல்..!!
பதின்மூன்று வயதுடைய சிறுமியின் கையைப்பிடித்து இழுத்து பாலியல் ரீதியில் செயற்பட்டதாக கூறப்படும் 74 வயதுடைய ஒருவரை சேருநுவர பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெல புதுகம, ஓயா அத்துல பிரதேசத்திலேயே நான்கு பிள்ளைகளின் தந்தையான 74 வயதுடைய ஒருவரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தனிமையிலிருந்த சிறுமியை வீட்டுக்குள் அழைத்து பாலியல் ரீதியில் கையைப்பிடித்திழுத்ததாக குறித்த சிறுமி பெற்றோர்களிடம் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் கைது செய்து கடந்த செவ்வாய்க்கிழமை மூதூர் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.
சந்தேக நபருக்கு ஐம்பதாயிரம் ரூபா சரீரப் பிணைக்கு இருவர் கையொப்பம் இடும்வரை நவம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் ஐ.எம். றில்வான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating