13 வயது சிறு­மியின் கையைப் பிடித்து இழுத்த 74 வய­தான நப­ருக்கு விளக்­க­ம­றியல்..!!

Read Time:1 Minute, 40 Second

images (1)பதின்­மூன்று வய­து­டைய சிறு­மியின் கையைப்­பி­டித்து இ­ழுத்து பாலியல் ரீதியில் செயற்­பட்­ட­தாக கூறப்­படும் 74 வய­து­டைய ஒரு­வரை சேரு­நு­வர பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

சேரு­நு­வர பொலிஸ் பிரி­வுக்குட்­பட்ட ஹெல புது­கம, ஓயா அத்­துல பிர­தே­சத்­தி­லேயே நான்கு பிள்­ளை­களின் தந்தையான 74 வய­து­டைய ஒரு­வ­ரையே பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

தனி­மை­யி­லி­ருந்த சிறு­மியை வீட்­டுக்குள் அழைத்து பாலியல் ரீதியில் கையைப்­பி­டித்­தி­ழுத்­த­தாக குறித்த சிறுமி பெற்­றோர்­க­ளிடம் முறைப்­பாடு செய்­த­தை­ய­டுத்து பொலிஸார் கைது செய்து கடந்த செவ்­வாய்க்­கி­ழமை மூதூர் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தினர்.

சந்­தேக நப­ருக்கு ஐம்­ப­தா­யிரம் ரூபா சரீரப் பிணைக்கு இருவர் கையொப்பம் இடும்­வரை நவம்பர் மாதம் 3 ஆம் திக­தி­ வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு மூதூர் நீதி­மன்ற நீதிவான் ஐ.எம். றில்வான் உத்­த­ரவு பிறப்­பித்­துள்ளார்.

இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கண்டி நகரில் தீ – இரண்டு கார்கள் எரிந்து நாசம்..!!
Next post காருக்குள் குழந்தை இருக்கும்போது புகைப்பிடிப்பவருக்கு அபராதம்: இங்கிலாந்தில் புதிய சட்டம் நாளை முதல் அமல்..!!