மூச்சுத்திணறி குழந்தை பலி : யாழில் சம்பவம்..!!
மூச்சுத்திணறி ஒன்றரை மாதக் குழந்தையொன்று பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று யாழ்ப்பாணம் ஊரெழு மேற்கில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் ஊரெழுப் பகுதியில் நேற்றைய தினம் தாயொருவர் தனது குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு உறங்க வைத்துள்ளார்.
இந்நிலையில் உறக்கத்தில் இருந்த குழந்தை மறுபக்கம் திரும்பிய வேளை மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளது.
குழந்தையை அவசரமாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு பெற்றோர் கொண்டு சென்றநிலையில், குழந்தை ஏற்கனவே இறந்தமையால், பிரேத அறையில் வைக்கப்பட்டு யாழ். நீதிமன்றத்தின் பணிப்புரைக்கு அமைவாக மரண விசாரணை இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து சடலம் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த குழந்தை ஒன்றரை மாதமுடைய காந்தன் சந்தோஸ் என தெரிவிக்கும் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating