திருவள்ளூர் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்…!!

Read Time:1 Minute, 31 Second

cc177834-a66d-4514-91f3-e509916c0c35_S_secvpfசென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலை 11 மணி அளவில் பேசிய மர்ம நபர், ‘‘திருவள்ளூரில் உள்ள பத்திரப்பதிவு அலுலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக’’ கூறி இணைப்பை துண்டித்து விட்டான்.

இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட போலீசாருக்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். திருவள்ளூர் டி.எஸ்.பி. விஜயகுமார், டவுன் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருந்த ஊழியர்களையும், பொதுமக்களையும் வெளியேற்றினர். பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயுடன் சோதனை நடத்தினர். வெடிகுண்டு எதுவும் சிக்க வில்லை.

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு திருவள்ளூரில் இருந்து மர்ம நபர் பேசியிருப்பது தெரிந்தது. இந்த டெலிபோன் எண்ணை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலீசாரின் வெடிகுண்டு சோதனையால் திருவள்ளூர் பத்திரப்பதிவு அலுவலகம் இன்று காலை பரபரப்பாக காணப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பைக்கில் கொண்டு செல்லப்பட்ட 10 லட்சம் அமெரிக்க டாலர் பறிமுதல்: தேர்தல் நேரத்தில் பீகாரில் பரபரப்பு…!!
Next post தர்மபுரி அருகே தடுப்பணையில் துணி துவைத்த 5 மாணவிகள் சேற்றில் சிக்கி பலி…!!