தர்மபுரி அருகே தடுப்பணையில் துணி துவைத்த 5 மாணவிகள் சேற்றில் சிக்கி பலி…!!

Read Time:1 Minute, 57 Second

56cf5ec0-5b52-4c54-939d-50df17e6a000_S_secvpfதர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் ஒன்றியத்தில் நலப்புரம் பட்டி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமமம் அருகே பூம்பள்ளம் என்ற பகுதி உள்ளது. இங்குள்ள ஒரு தடுப்பணையில் இன்று பகலில் துணி துவைக்க சென்ற நலப்புரம்பட்டியைச் சேர்ந்த 5 மாணவிகள் சேற்றில் சிக்கி பலியானார்கள்.

முதலில் ஒரு மாணவி சேற்றில் சிக்கி உயிருக்கு போராடிய போது அடுத்தடுத்து மற்ற மாணவிகள் கையை கொடுத்து காப்பாற்ற முயன்ற போது அவர்களும் சேற்றில் சிக்கி பலியானார்கள். இதில் 2 பேர் இரட்டைக் குழந்தைகள் ஆவார்கள்.

பலியான 5 பேரின் பெயர் விவரம் வருமாறு:–

1) அஞ்சலி (வயது 16). லட்சுமி காந்தன்– சுமதி ஆகியோரின் மகள். இவர் 11–ம் வகுப்பு படித்தார்.

2) ஹரினி (8). இவர் அஞ்சலியின் தங்கை ஆவார்.

3) புவனேஸ்வரி (14), சேகர்–முனியம்மாள் ஆகியோரின் மகள்.

4) ராஜேஸ்வரி (14),சேகர் –முனியம்மாள் ஆகியோரின் மகள். புவனேஸ்வரியும், ராஜேஸ்வரியும் இரட்டை குழந்தைகள் ஆவார்கள். இவர்கள் அங்கு உள்ள பள்ளியில் 9–ம் வகுப்பு படித்தனர்.

5) சரிதா (12). சுப்பிரமணி –தேன்மொழி ஆகியோரின் மகள். இவர் 7–ம் வகுப்பு படித்தார்.

ஒரே கிராமத்தை சேர்ந்த 5 மாணவிகள் பலியானதால் நலப்புரம் பட்டி கிராமம் சோகத்தில் மூழ்கி உள்ளது. கிராம மக்களும். பென்னாகரம் போலீசாரும் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருவள்ளூர் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்…!!
Next post கோயம்பேடு பஸ் நிலையத்தில் செல்போன் திருடர்களை பயணிகள் மடக்கி பிடித்தனர்…!!