போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்…!!
Read Time:54 Second
நெல்லை மாவட்டம் சுரண்டை இரட்டைகுளத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது27). வீரவநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் வரலட்சுமி (23). இருவரும் காதலித்து வந்தனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பதிவு திருமணம் செய்து கொண்டனர். பெற்றோர் இந்த திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டை விட்டு சென்னைக்கு ஓடி வந்தனர். பெற்றோர்களால் உயிருக்கு ஆபத்து என கூறி இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கமிஷனரிடம் மனு கொடுத்தனர்.
Average Rating