யாழில் தொடரும் வாழைக்குலை திருட்டு! செய்கையாளர்கள் திண்டாட்டம்…!!

Read Time:1 Minute, 54 Second

panana-farmபுன்னாலைக்கட்டுவன் வடக்கில் தொடரும் வாழைக்குலைத் திருட்டினால் வாழைச் செய்கையாளர்கள் செய்வதறியாது திண்டாடுகின்றார்கள்.

கடந்த வியாழக்கிழமை அதிகாலையிலும் கூட சுமார் இருபத்தையாயிரும் ரூபாவுக்கு மேற்பட்ட பெறுமதியுடைய வாழைக்குலைகள் திருடப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் இரவும் சுமார் பதினைந்து முதல் இருபது வரையிலான் வாழைக்குலைகள் புன்னாலைக்கட்டுவன் மஸ்கன் வீதியில் அமைந்துள்ள இரண்டு வாழைத் தோட்டங்களில் திருடிச் செல்லப்பட்டுள்ளன.

கடந்த புதன்கிழமை உடுவில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் கிராம அலுவலர்களும் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் குறிப்பிட்ட வாழைக்குலைத் திருட்டுக்கள் சம்பந்தமாக முறையிட்ட போதிலும், சுன்னாகம் பொலிசார் தாம் இதனை கட்டுப்படுத்த ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பிரதேச செயலாளர் முன்னிலையில் கூறி சமாளித்துள்ளார்கள்.

குறிப்பிட்ட விடயம் சம்பந்தமாக பொலிசார் கூறிய சில மணித்தியாலங்களிலேயே இத்தகைய திருட்டுகள் இடமபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அசாத் சாலிக்கெதிராக கிழக்கில் ஆர்ப்பாட்டம்..!!
Next post கொலைக்குற்றவாளிக்கு மரண தண்டனை..!!