காரைதீவு பஸ் தரிப்பிடத்தில் இருந்து ஆணின் சடலம் கண்டெடுப்பு..!!
Read Time:1 Minute, 6 Second
அம்பாறை, காரைதீவு பகுதியிலுள்ள பஸ் தரிப்பிடத்தில் இருந்து ஆணின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் கல்முனை – அம்பாறை பிரதான வீதியின் காரைதீவு சந்திக்கருகிலுள்ள பஸ் நிலையத்தில் இருந்து இந்த சடலம் இன்று (02) காலை கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலத்திற்கு அருகிலிருந்து சிறிய பயணப் பொதியொன்றும் மீட்கப்பட்டுள்ளது-
சுமார் 68 வயதுடைய ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், காரைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Average Rating