மகளை துஷ்பிரயோகம் செய்த நபரை இரும்புக் கம்பியால் தாக்கிய தாய்..!!
Read Time:1 Minute, 18 Second
மனைவி வெளிநாடொன்றில் பணிப்பெண்ணாக பணிபுரிய சென்றிருந்த நிலையில் கணவர் அயல் வீடொன்றில் வசித்த 28 வயதான யுவதியொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியது தொடர்பான குற்றச் சாட்டில் ஹெம்மாத்தகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யுவதியின் தாய் அச்சந்தர்ப்பத்தில் வீட்டை விட்டு தேவையொன்றுக்காக வெளியே சென்றிருந்துள்ளார்.
அவர் திரும்பி வந்தபோது சந்தேக நபர் யுவதியுடன் இருப்பதைப் பார்த்து இரும்புக் கம்பியொன்றால் தாக்கியுள்ளார்.
இருந்தும் அந்த நபர் தாக்குதலிலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
யுவதியின் தாய் ஹெம்மாத்தகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் ஹெம்மாத்தகம நகரில் வைத்து இந்த நபரைக் கைது செய்தனர்.
Average Rating