பொலன்னறுவையில் வீசிய பலத்த காற்றினால் 20 வீடுகளுக்கு சேதம்..!!
Read Time:45 Second
பொலன்னறுவை, தமன்கடுவ பகுதியை ஊடறுத்து வீசிய காற்றினால் 20 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
தமன்கடுவ பகுதியூடாக நேற்றிரவு கடும் காற்று ஊடறுத்து வீசியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
காற்றினால் சேதமடைந்த வீடுகளுக்காக நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் கூறியுள்ளது.
Average Rating