போலி நாணயத்தாளுடன் இளைஞர் கைது..!!
Read Time:50 Second
குருணாகல், இப்பாகமுவ பிரதேசத்தில் போலி நாணயத் தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இப்பாகமுவ பிரதேசத்தில் பெற்றோல் நிரப்பும் நிலையம் ஒன்றில் 5000 ரூபா நாணயத்தாளை மாற்றுவதற்கு சென்றவேளை அது போலி நாணயத்தாள்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் ஆவார்.
சந்தேக நபர் இன்று குருணாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொகரல்லை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating