வைத்தியசாலைக்கு சென்ற முச்சக்கரவண்டி விபத்து – இருவர் படுங்காயம்..!!

Read Time:1 Minute, 31 Second

DSC00891ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் முச்சக்கரவண்டி ஒன்று பிரதான வீதியில் குடைசாயந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இவ்விபத்து 02.10.2015 அன்று வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹட்டன் – அலுத்கம பிரதேசத்தில் இருந்து டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு சென்ற போதே இவ்வாறு தனது வேக கட்டுப்பாட்டை இழந்து அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் டிக்கோயா பகுதியில் வைத்து குடைசாயந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேற்படி முச்சக்கரவண்டியில் சாரதியும் பெண் ஒருவரும் பயணித்துள்ளனர். விபத்தில் படுங்காயமடைந்த இருவரும் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேவேளை குறித்த முச்சக்கரவண்டிக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போலி நாணயத்தாளுடன் இளைஞர் கைது..!!
Next post சிறுப்பிட்டிப் பகுதியில் மோட்டார்சைக்கிள் மோதி வயோதிப பெண் உயிரிழப்பு..!!