துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி..!!
Read Time:54 Second
இங்கிரிய பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை 4.15 மணியளவில் மரண வீடொன்றுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, வீட்டிற்கு முன் தனது மகன் துப்பாக்கி சூட்டுக்கு இழக்காகி இறந்து கிடந்ததாக குறித்த இளைஞனின் தந்தை தெரிவித்துள்ளார்.
அதன்படி தந்தையினால் இங்கிரிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
28 வயதுடைய இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை இங்கிரிய பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
Average Rating