சுற்றுலா சென்ற இடத்தில் கொடூரமாக தாக்கப்பட்ட குடும்பம்: குற்றவாளிகளை பாதுகாக்கும் பொலிஸ்..!!
ஸ்பெயின் நாட்டில் சுற்றுலா சென்ற ஒரு குடும்பத்தினரை கும்பல் ஒன்று கொடூரமாக தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அயர்லாந்தின் Belfast பகுதியில் இருந்து Celine Fitzpatrick என்பவரின் குடும்பம் ஸ்பெயின் நாட்டின் Benidorm பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளது.
சம்பவத்தன்று Martin Fitzpatrick என்பவரை வழிமறித்த கும்பல் ஒன்று தகாத வார்த்தையால் திட்டியதுடன் திடீரென தாக்கத்துவங்கியுள்ளது.
அந்த கும்பலிடம் இருந்து தப்பிய Martin குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார்.
அடுத்த நாள் தமது சகோதரருடன் சென்ற மார்ட்டினை வேறொரு கும்பல் வம்புக்கிழுத்துவிட்டு மீண்டும் தாக்கியுள்ளனர்.
இதனிடையே அந்த கும்பலில் ஒருவன் கத்தியால் 3 முறை Martin ஐ குத்திவிட்டு தப்பியுள்ளான். இதில் பலத்த காயமடைந்த Martin தீவிர சிகிச்சைக்கு பின்னர் உடல் நலம் தேறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்ட பொலிஸ், தற்போது Celine Fitzpatrick குடும்பத்தினர் மீதே தவறு எனவும்,
தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட Martin, Daniel ஆகியோரை விசாரணைக்காக ஸ்பெயின் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் கடிதம் அனுப்பியுள்ளது.
சம்பவத்தின்போது அப்பகுதிக்கு வந்த பொலிசார் வெறுமனே பார்த்துக்கொண்டு நின்றதாகவும், தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யாமல்
பாதிக்கப்பட்ட தங்கள் மூன்று பேரையும் கைது செய்ததாகவும் Celine தெரிவித்துள்ளார்.
மேலும் பொலிசாரை தாக்கியதாக கூறி கைது செய்து 3 நாள் விசாரணை நடத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வரும் திசம்பர் 17-ம் திகதி வழக்கில் சம்பத்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating