சேத்துப்பட்டில் பள்ளி மாணவி கடத்தி கற்பழிப்பு: கவுன்சிலர் மகன் கைது..!!
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருந்ததிபாளையம் பகுதியை சேர்ந்த 15 வயது நிரம்பிய மாணவி தனியார் பள்ளியில் பிளஸ்–1 படித்து வருகிறார்.
இவர் பள்ளிக்கு செல்லும்போதும் திரும்பிவரும்போதும் அதே பகுதியை சேர்ந்த சேத்துப்பட்டு பேரூராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர் ரவி என்பவர் மகன் பிரபாகரன் (வயது 23) பின்தொடர்ந்து சென்று அவருடன் பேசியுள்ளார்.
பிரபாகரன் தங்கள் பகுதியை சேர்ந்தவர் என்பதால் மாணவியும் அவருடன் பேசியிருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று மாணவியை ஒரு மினிவேனில் கடத்தி சென்று பாளியப்பட்டு ஏரிக்கரையில் வைத்து பிரபாகரன் கற்பழித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சலிட்டார்.
உடனே அவரை பிரபாகரன் வீட்டுக்கு அழைத்து சென்று விட்டுள்ளார். அப்போது மாணவி இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். உடனே பெற்றோர் சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, சப்–இன்ஸ்பெக்டர்கள் பிரபாவதி, சிதம்பரம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர். மாணவி சிகிச்சைக்காக போளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
Average Rating