கோவை காளப்பட்டி அருகே பிறந்து 2மணி நேரத்தில் பெண் குழந்தை புதருக்குள் வீச்சு…!!

Read Time:1 Minute, 17 Second

cb7e4c3e-fb5c-47af-ba97-fb200437820d_S_secvpfகோவை காளப்பட்டி பகுதியில் உள்ள பள்ளி அருகே இரவு 10 மணியளவில் புதருக்குள் குழந்தையின் அழுகுரல் கேட்டது. தகவல் அறிந்த அன்பு இல்ல நிர்வாகிகள் சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த குழந்தையை மீட்டனர். பிறந்து 2 மணி நேரமே ஆன அந்த பெண் குழந்தையை வீசிச்சென்றது யார் என்று தெரியவில்லை.

புதருக்குள் இருந்து மீட்கப்பட்ட அந்த பெண் குழந்தையை தனியார் ஆஸ்பத்திரியில் போலீசார் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அன்பு இல்ல நிர்வாகிகள் அந்த குழந்தையை கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பிறந்த 2 மணி நேரத்தில் குழந்தையை வீசிச்சென்ற கொடூர தாயை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சமையல்காரர் கொலையில் 2 வாலிபர்கள் கைது…!!
Next post சுவர் இடிந்து வீழ்ந்ததில் சிறுவன் பலி…!!